தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:- மலைவளம் என்பது வியாபார பொருள் அல்ல. அது மக்களுக்கானது. அதனை கொண்டு சென்று அண்டை மாநிலத்திற்கு தாரை வார்ப்பதை ஏற்க முடியாது. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு மிக மோசமாக உள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் தென்காசி மாவட்டத்தில் 3 கொலைகள் நடந்துள்ளது. விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கருணாநிதி, ஜெயலலிதா இருந்த காலத்திலேயே அரசியலுக்கு வந்தவர்கள் நாங்கள். அவர் வேற, நான் வேற. எங்களுக்கு இடையேயான பந்தம் அண்ணன்-தம்பி மட்டும் தான். நான் பேசுவதை தான் தம்பி பேசியிருக்கிறார். அது எனக்குத்தான் வலிமை சேர்க்கும். என் ஓட்டை நடிகர் விஜயால் பிரிக்க முடியாது. அண்ணாமலை நேர்மையானவர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஊழலை பற்றி பேச அண்ணாமலைக்கு தகுதி உண்டு. அவர் சார்ந்த கட்சிக்கு அந்த தகுதி உண்டா?. பா.ஜனதா, காங்கிரஸ், அ.தி.மு.க., தி.மு.க ஆகியவை ஊழலை பற்றி பேச தகுதி இல்லாதவை. தமிழ் வேட்பாளரை பிரதமர் வேட்பாளராக பா.ஜனதா அறிவித்தால் நாங்கள் அவர்களை ஆதரிக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
பிரதமர் வேட்பாளரானால் ஆதரிப்போம்: விஜய் அரசியலுக்கு வந்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை- சீமான்
Goocle